திங்கள், 17 மே, 2021

வாழ்தல் - Art of Living

https://youtu.be/h8zfYSxll7E

வாழ்தல், இருத்தல், பிழைத்தல் குறித்தும் சங்க காலத்தில் "வாழ்தல்" என்று புலவர் கருதிய ஒரு பெரு  வாழ்க்கை குறித்தும் உரை.


வழங்குபவர்: திரு சொ.வினைதீர்த்தான்.

நன்றி

............................

இடுக; சுடுக; எதுவும் செய்க!

>>>>>>>>>>>>>>>>>>>

பாடியவர்: பேரெயில் முறுவலார். 

பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன் (புறநானூறு 239). இவன் பாண்டிய நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னன். 

பாடலின் பின்னணி: சங்க காலத்தில், வாழ்க்கையின் உறுதிப் பொருட்களாகக் கருதப்பட்ட அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் நம்பி நெடுஞ்செழியன் சிறப்புற்று விளங்கிப் புகழுடன் வாழ்ந்து இறந்தான். அவன் இறந்த செய்தி கேட்டு பலரும் அவன் அரண்மனையில் கூடினர். அவன் போரில் இறக்காததால், அவன் உடலை வாளால் பிளந்து, புதைக்க வேண்டும் என்று சிலர் கருதினர். வேறு சிலர், அவன் உடலை எரிப்பதுதான் முறையான செயல் என்று கருதினர். அப்பொழுது, பேரெயில் முறுவலார், ”நம்பி நெடுஞ்செழியன் பல துறைகளிலும் சிறப்புற்று வாழ்ந்தவன். அவன் செய்யத் தக்கவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்தவன். ஆகவே, அவனைப் புதைத்தாலும் சரி, அல்லது எரித்தாலும் சரி; இரண்டுமே தவறில்லை.” என்று இப்பாடலில் கூறுகிறார்.


"தொடியுடைய தோள் மணந்தனன்;

கடி காவிற் பூச்சூடினன் ;

தண் கமழுஞ் சாந்து நீவினன் ;

செற்றோரை வழிதபுத்தனன் ;

நட்டோரை உயர்புகூறினன் ;

வலியரென வழி மொழியலன் ;

மெலியரென மீக்கூறலன்;

பிறரைத்தான் இரப்பறியலன் ;

இரந்தோர்க்கு மறுப்பறியலன் ; வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;

வருபடை எதிர்தாங்கினன் ;

பெயர்படை புறங்கண்டனன் ;

கடும் பரிய மாக் கடவினன் ;

நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ;

ஓங்கு இயற் களிறுஊர்ந்தனன்;

தீஞ்செறி தசும்பு தொலைச்சினன்;

பாண் உவப்பப் பசி தீர்த்தனன்; மயக்குடைய மொழிவிடுத்தனன்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன்; ஆகலின்

இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ,

படுவழிப் படுகஇப் புகழ் வெய்யோன் தலையே.

https://m.facebook.com/story.php?story_fbid=4262713727096001&id=100000722463448

கருத்துகள் இல்லை: