அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்து.
ஒரு காணொளி கண்டேன். "ஒரு செங்கலிலிருந்து உழைப்பை எடுத்துவிட்டால் அது களிமண். ஒரு இயந்திரத்தில் இருந்து உழைப்பை எடுத்துவிட்டால் அது ஒரு இரும்புக் குவியல். அதுபோல ஒரு நாற்காலியில் உழைப்பு இல்லாவிட்டால் மீதமிருப்பது மரமே!" என்றது அக்காணொளி. 👏👏👏👏
அழகு நகருண் டாக்கி சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக் குலத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச்சு எவரின் மூச்சு?
உலகத் தொழிலாளரையெல்லாம் ஒரு சேரப் போற்றுகிறேன்.
சொ.வினைதீர்த்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக