தமிழர்களின் ஆன்மீகச் சொத்தான #சைவ சித்தாந்தம் , #சிவாகமம் #பன்னிரு திருமுறைகள் ஆகியவற்றைக் கற்பிக்கும் பாடப்பிரிவுகள் சென்னை பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்படும் என இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது
மாணவர் சேர்க்கை குறைவாக
உள்ளது என்பதைக் காரணம்
காட்டி இந்த முடிவைச் சென்னைப்
பல்கலைக் கழகத் துணைவேந்தர்
எஸ்.கௌரி என்பவர் அறிவித்துள்ளார். இந்த "கெளரி" அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். தொழில் நுட்பப் பட்டதாரி. தமிழ், வரலாறு, வணிகம் , தத்துவம், மருத்துவம் போன்ற துறைகளில் தகுதி பெற்றவர்களே சென்னைப் பல்கலை கழகத் துணை வேந்தராக அமர்த்தப்படுவது மரபு.
ஆனால், ஒரு தொழில்நுட்பாளர்
துணை வேந்தராக அமர்த்தப்பட்டுள்ளார். அதுதான் இந்த அநீதியான முடிவுக்குகுக் காரணம்.
அல்லது யாருடைய ஆலோசனை என்பதும் தெரியவில்லை.
இதுகுறித்து அனைவரும்
கடும் கண்டனத்தைத் தெரிவித்துத் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இந்தப் பாடப் பிரிவுகள் தொடர வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்
The University of Madras has
suspended three postgraduate
programmes, in view of reduced enrolment. The programmes are
MA Saiva Siddhanta, Siva Agamas and Panniru Thirumurai classics.
The decisions were announced at the annual meeting of the
University of Madras Senate on
Saturday, By Vice-Chancellor S Gowri .
இந்து மதம் என்பதில் சைவம் சேர்ந்துதானே? எவரிடமிருந்தும் இந்தச் செய்தியைக் குறித்தும் பன்னிருதிருமுறை போன்ற படிப்புக்களை நீக்கக்கூடாது; ஒருவர் சேர்ந்திருந்தாலும் நடத்த வேண்டும் என்று எடுத்துக் கூறும் ஒரு பதிவையும் இதுவரை பார்க்கவில்லை.
இன்று பல கிராமங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளது. இருந்தாலும் அப்பள்ளிகள் அரசாங்கத்தால் நடத்தப்படவில்லையா?
ஆர்வலர்கள் உடன் நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுக்க வேண்டும்!
சொ.வினைதீர்த்தான்
1 கருத்து:
மிக நல்ல கருத்து.பாடப்பிரிவுகளிள் கண்டிப்பாக பன்னிரு திருமுறை சேர்க்கப்பட வேண்டும்
கருத்துரையிடுக