ஐந்து பன்னாட்டு அமைப்பினர் இணையம் வழியாக நடத்துகிற உரைத்தொடரில் 10.5.2021 அன்று
காவிரி வடகரைத் தலங்கள் உரைவரிசையில் "திருப்புறம்பியம் புன்னை வன நாதர், கரும்பன்ன சொல்லி அம்மை கோவில்" குறித்த சிறப்புரை 👌
தேவாரம் பாடல்பெற்ற கோவில் சார்ந்த என்னுடைய உரை முயற்சி!
திருப்பறம்பயம் மூவர் பாடிய தலம். பிரளயம் காத்த விநாயகர் திருவுரு சிப்பி, நத்தைக் கூடு, கிளிஞ்சல் போன்றவற்றால் உருவனாது. வருடத்திற்கு ஒரு முறை சதிர்த்தியன்று தேனாபிசேகம் செய்யப்படுகிறது. அனைத்துத் தேனையும் உள்வாங்கிவிடும் சிறப்புடையது இந்த விநாயகர் திருவுரு.நான்
குரு (வெள்ளி) பகவான் தனிக்கோவிலிலும் தட்சிசிணாமூர்த்தி தனிக்கோவிலில் சட்டைநாதர் தளமுடனும் அருள்பாலிக்கிறார்கள். சாம்பிராணித் தைலம் மட்டிலும் பயன்படுத்தப்படும் குகனை ஏந்திய அம்பிகை தனிக்கோவிலில் காட்சி தருகிறார்.
கோவில் சிற்பத் தொகுதிகள் காணக் கண் கோடி வேண்டும்!
"தெள்ளுற்ற தமிழமுதின் சுவை" திருப்புறம்பயம் தலத்திற்கான மூவர் தேவாரத்தில் பூரணமாய்ப் பொங்கிப் பொலிந்திருக்கிறது . (Shaivam.Org திருப்புறம்பயம்)
திருவிளையாடல் புராணம், தல புராணத்தில் வணிகப் பெண் திருமணத்திற்குச் சாட்சி உரைத்ததால் "புன்னை வனநாதர்" என்னும் பெருமான் "சாட்சிநாதர்" எனத் திருநாமம் பெறுகிறார். அம்பாள் "கரும்பன்ன சொல்லி" வடமொழியில் "க்ஷீண வாணி" என அழைக்கப்படுகிறார்!
அன்புடன் உரையைச் செவிமடுக்க வேண்டுகிறேன்.
நன்றி🙏
சொ.வினைதீர்த்தான்
https://m.facebook.com/story.php?story_fbid=4347800298587343&id=100000722463448
https://youtu.be/FYnl5zzkEw8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக